Sunday, August 11, 2013

மனம்

மனம் ஒரு பாத்திரத்தில் நிரப்பிய நீர் அது அந்த பாத்திரத்தின் வடிவைகொண்டது. ஆனந்த கூச்சலும் ஆழ்ந்த சோகமும் அதே மனதின் வேறு வேறு வடிவங்கள். ஆசை அறிவின் சூழ்ச்சி அது மனதிற்கு ஏவாளின் ஆப்பிலை போல ஆசையினை காட்டி இதை ருசித்து பார் என்று எதையாவது உருட்டிவிட்டுகொண்டே இருக்கும்.மனதையும் அறிவையும் பிரிக்கும் ஒரே அம்சம் மனசுக்கு மூளை எட்டுவதே இல்லை அதனால் ஆசையால் எதையும் ஞாபகம் வைத்து கொள்ள முடியாது ஒருமுறை சூடுபட்டால் அறிவு ஒதுங்கி கொள்ளும் ஆனால் மனது மீண்டும் மீண்டும் சூடுபட்டுகொண்டே இருக்கும்.
ஒருவர் வளர வளர அறிவு வளர்ந்து கொண்டே  இருக்கும் ஆனால் மனசு அப்படி இல்லை வயதை பொருத்து அது மாறுவது இல்லை.அது இருக்கும் பாத்திரத்தின் வடிவில் உள்ளதே தவிர மனது மனமாகவே இருக்கின்றது. இந்த உண்மை புரியவைத்தது ஒரு சம்பவம். அன்று வழக்கமான ஒரு வேலை நாள் அலுவலம் முடித்து வழக்கம் போல் வீடு திரும்பி கொண்டிருந்தேன். பேருந்து நிலையத்தில் இருந்து வீட்டிற்கு நடந்து வந்துகொண்டிருந்தேன் தெருவில் அதிகம் கூட்டம் இல்லை அங்கங்கே சிலர் தென்பட்டனர் வழியில் ஒரு கடையின் அருகில் ஒரு அறுபது வயது மதிக்கத்தக்க ஒரு அம்மா அவசர அவசரமாக ஒரு மாம்பழத்தை தின்று கொண்டிருந்தார் கையில் ஒரு பையில் ஐந்தாறு மாம்பழங்கள் இருந்தன எங்கோ பரிட்சியமான முகம் யார் என்று ஞாபகம் வரவில்லை நான் பார்ப்பதை அவர் கவனித்தவுடன் சட்டென பார்வையை வேறு பக்கம் திருப்பிக்கொண்டேன்.

                      இது நடந்து ஒரு வாரம் இருக்கும் வீட்டில் அனைவரும் ஊருக்கு சென்றிருந்தனர் மதியம் சாப்பிட்டு முடித்து என்ன செய்வது என்று யோசித்ததும் அருகில் உள்ள தோழியின் வீடு ஞாபம் வரவே அவளை கைபேசியில் அழைத்தேன் வெளியில் சென்று உள்ளதாகவும் அரை மணிநேரத்தில் திரும்பி விடுவதாகவும் வீட்டில் அம்மா உள்ளார் வேண்டும் என்றால்  வீட்டில் சென்று காத்திருக்கவும் என்று சொன்னால். சரி என்று தோழியின் வீட்டில் சென்று காத்திருந்தேன் சிறிது நேரத்தில் கையில் காபியுடன் வந்த அவளின் அம்மா வீட்டில் உள்ளவரின் நலன் குறித்து  விசாரித்தார் தோழிக்கு வரன் பார்த்து கொண்டிருப்பது முதல் ஊரில் போனமாதம் நடந்த தேரோட்டம் வரை அனைத்தையும் பற்றி பேசிக்கொண்டு இருந்தோம். நடுவில் பக்கத்து வீட்டில் குடியிருக்கும் ஒரு அம்மாவும் எங்களுடன் கலந்து கொண்டார் போன வாரம் பார்த்த அதே அம்மா தான்.பேசிகொண்டிருக்கும் போதே நடுவில் கேட்கலாமா வேண்டாமா என மனதை அரித்த அந்த கேள்வியை கேட்டே விட்டேன்.வீடு அருகிலேயே இருந்தும் ஏன் அன்று வழியில் நின்று கொண்டு மாம்பழங்களை சாப்பிட்டு கொண்டிருந்தீர் என்று. அதற்கு அவர் சொன்ன பதில் மாம்பழம்  சாப்பிடவேண்டும் என்ற ஆசை தான் என்று சிறுபிள்ளையாய் பதில் சொன்னார்.

                            ஆனால் அந்த அந்த பதிலில் உள்ள வலியை பிறகு அவர் சொன்ன போது தான் உணர முடிந்தது. தான் தன் மகன் மற்றும் மருமகளுடன் உள்ளதாகவும் கணவர் இறந்து பத்து வருடம் மேல் அவுவதாகவும் சொன்னார். திருமணம் ஆன நாள் முதல் அனைவரின் விருப்பு வெறுப்பு அறிந்து நடந்துள்ளதாகவும் தனக்கென தனிப்பட்ட எந்த ஒரு விருப்பு வெறுபிற்கான வெளி அமையவில்லை என்றும் அதை குறித்து பெரிதாய் அலட்டிகொள்ளாமல் கணவன் மற்றும் குழந்தையின் தேவையையே பெரிதாய் கொண்டு வாழ்ந்துள்ளார். வாழ்வின் இன்பங்கள் எல்லாம் குழந்தையின் படிப்பு மற்றும் முன்னேற்றம் என்று காலத்தை கடத்திவிட்டதாகவும் கூறினார். இன்று மகன் பெரிய நிறுவம் ஒன்றில் பெரிய பதவியில் கை நிறைய சம்பாதிப்பதாகவும் மருமகளும் வேளைக்கு செல்வதாகவும் சொன்னார். இன்று எல்லாம் இருந்தாலும் தன் சின்ன சின்ன ஆசைகள் கூட வெளிபடுத்தவே அசிங்கமாக உள்ளதாக சொன்னார். அப்படி என்ன ஆசை என்று நான் கேட்டதற்கு. வீட்டில் எதாவது சாப்பிட வங்கி வந்தால் “ம்ம்ம் அவங்களுக்கு இதலாம் பிடிக்காது கொஞ்சமா கொடு” என்று விருப்பு வெறுப்பு கூட அவர்களே முடிவுசெய்து  கொள்வதாகவும் தன்னிடம் கேட்பது கூட  கிடையாது என்றும் கூறினார். நாம் எதாவது கேட்டால் இவ்வளவு வயசாகியும் ஆச விடுதா பாரு என்று சொல்லுவார்களோ என்று ஒரு கூச்சம். வீட்டில் தொலைகாட்சி பெட்டி முதல் சமையல் வரை சிறிய குழந்தை முதல் மகன் வரை யார்வேண்டும் என்றாலும் தீர்மானிப்பர் ஆனால் நமது வயதை காட்டி நமக்கு அந்த உரிமை கிடைக்காது. வயதானால் ரசனை ஆசை இல்லாத ஒரு துறவியாகவே நாம் பாவிக்க படுகின்றோம். வாழ்வில் முதல் பாதி கணவர் வரும் வரை வீட்டில் உள்ளவர் நமது ஆசைகளை நமக்காக அவர்கள் ஆசைபடுகிறார்கள்.கணவன் வந்த பிறகு (அதே தப்பை) நாம் அவர்களின் ஆசையை அவர்களுக்காக நாம் ஆசைபட  ஆசைபடுகிறோம் கடைசியாக நாம் நமக்காக ஆசைபடும் போது மீண்டும் நமக்காக அவர்களே அசைபடுகிறார்கள். அவரவர் அவரவருக்காக ஆசை பட்டாலே போதும் ஆசை நிறைவேறுவதை காட்டிலும் அது சந்தோஷமான ஒன்று என்றார். எத்தனை வலிகள் நிறைந்த வரிகள் இன்று இது நமது எல்லோர் வீட்டிலும் நடப்பதுதான் ஆனால் அது நமக்கு வயதாகும் போது தான் தெரிகின்றது. என்றாவது நமது அம்மா இன்று எனக்கு பிடித்த மோர்குழம்பு, உருளை வறுவல் என்று சமைத்ததுண்டா இல்லை, நாம்தான் என்றாவது உனக்கு என்ன பிடிக்கும் என்று கேட்டதுண்டா உன் இஷ்டம் என்று சொல்லுவோம் ஆனால் அது அவளுக்கு பிடித்த ஒன்றா என்றால் தெரியாது. discoveryயும், animalplanetஉம் நமது விரல் நுனியில் அவளுக்கு பிடித்த நாடகம் எப்போவதாவது அவள் கெஞ்சும் நமது விளம்பர இடைவெளியில். வயோதிகம் அது உடலிற்கே தவிர மனதிற்கு அல்ல நமது பாட்டியின் மனதில் இன்றும் பருவம் எய்தாத ஒரு பதின் பருவ குழந்தையின் மனது இருக்கலாம் அவளின் ஆசையைத்தான் கொஞ்சம் காது கொடுத்து கேளுங்களேன் அந்த குழந்தைக்கும் வரலாம் உங்கள் மீது ஒரு பருவ காதல்.     

   

Wednesday, May 1, 2013

வலையில் கூர்தீட்டபடும் சாதி


   இன்று தமிழகத்தில் மீண்டும் சாதிய முன் நிறுத்திய பார்வை தலைதூங்கி உள்ளது. மெத்த படித்த பன்னாட்டு நிறுவனத்தில் வேலை பார்ப்போர் மத்தியிலும் இந்த வழக்கத்தை பார்க்க முடிகின்றது. தன் சாதிய சக பணியாளிடம் மற்ற சமூகத்தை சார்ந்தோறை காட்டிலும் அதிகம் நெருக்கம் அல்லது முன்னுரிமை கொடுக்க படுகிறது. வெளிநாட்டில் அதுவும் சிங்கபூர் மலேசிய நாடுகளில் வேலை பார்த்து விட்டு வரும் சக பணியாளரிடம் இந்த எண்ணம் தழைதோங்கி உள்ளது என்ன்பதை கண்கூடாக பார்க்க முடிகிறது.

     சாதிமாட்டும் இன்றி ஆரிய திராவிட எண்ணம் இன்று சத்தமில்லாமல் பரவிவருகிறது. இந்த சாதிய தீ மெத்த படித்தவர்களின் மனதில் விதைக்க சமுக வலைதளங்களும் ஊடகங்களும் முக்கிய காரணம் தன் மதமோ சாதியோ சமூகமோ பிறரால் இந்த சமுக வலைதளங்கலில் இழிவு படுத்தப்படும் போது அல்லது விமர்சிக்க படும் போது அந்த தகவல் குறித்த எந்த உண்மையும் ஆராயபடாமல் கண்மூடித்தனமான எதிர்ப்பு அங்கே பதியபடுகிறது. சிலர் லைக்குக்கும் கமெண்டுக்கும் ஆசைப்பட்டு இந்த மாதிரியான தகவல்களை உண்மைத்தன்மை அறியாமல் பகிர்கின்றனர்.சில பதிவின் பின்னூட்டம் பார்த்தால் அங்கே ஒரு பொது கழிவறை அசுத்தம் சொற்களால் இறைத்து வைக்க பட்டிருக்கும்.பெரும்பாலும் பதிவரை கொச்சை படுத்தியோ இல்லை தைரியம் இருந்தால் அந்த மதத்தை பற்றி எழுது இந்த சதியை பற்றி எழுதவேண்டியது தானே என்று வேறு மதமோ சாதியோ சமூக பக்கம் திசை திருப்பி விடுவர். அவரும் நான் அக்மார்க் ஹால்மார்க் ஐஎஸ்ஐ என அனைத்து தர சான்றிதல் பெற்ற நடுநிலை வாதியாக தனை காண்பித்து கொள்ளும் வகையில் அந்த வேற்று சமூகத்தினரை சாடி இன்னொரு பதிவு போடு பின்னூட்டம் பாருங்கள் அந்த சாதியினரே நான் இவர்களை பற்றியும் எழுதியுள்ளேன் நான் நல்லவன் என்ற ரீதியில் பதிவை முடிப்பார்.

சாதி கலவரம் இங்கு வார்த்தையால் விதைக்கபடுகிறது.இந்த புறமுதுகு போரில் வாய் வீசும் பலரும் விசைபலகை வீரர்கள் வெள்ளை வேட்டி, முரட்டு மீசை, அருவாள் ஆயுதம் பதிலாக மடிப்பு கலையாத சட்டை ஜீன்ஸ் பேண்ட்,நன்கு மழிக்க பட்ட முகம்,கீபோர்டு மௌஸ் என திரியும் இவர்களை இன்று எல்லா பேருந்து நிறுத்தம் அலுவலகம் வணிக வளாகம் திரைஅரங்கு என் எல்லா இடத்திலும் கையில் ஒரு திரண்பேசியுடன் (ஸ்மார்ட்போன்) பார்க்கலாம்.

தமிழகம் இன்று சாதி கலவரத்தை முன்னோக்கி நகர்கின்றது. சாதிய சிந்தனை இன்று மீண்டும் இளைய தலைமுறையினர் இடம் வேரூன்ற துடிகின்றது அரசியல் சாதிய அமைப்புகள் இவ்விசகளைகளை நீர் பாசி வளர்கின்றன. 

சாதிகள் இல்லையடி பாப்பா! - குலத்
தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்!
நீதி,உயர்ந்தமதி,கல்வி - அன்பு
நிறைய உடையவர்கள் மேலோர்.

டிஸ்கி: இந்த பாடலை இணையத்தில் தேடும் போதே பல சாதிய சண்டைகள் சாதிய சிந்தனைகள் இந்த பாடல் முன்னுதாரனமாக காட்டி முட்டி கொண்டுள்ளனர் கொடுமை.

Sunday, December 16, 2012

"_ _ _ _ _ _"கள்



             புற்றீசலாக ரக்கை கட்டி பறந்து கொண்டிருந்தனர் மக்கள் அனைவரும்  அனைவரும் நேரத்துடன் போட்டாபோட்டி போட்டு கொண்டு பிரபஞ்ச விதியை மீற முயற்சித்துகொண்டிருந்தனர். ரயில் நிலையம் முழுவதும் மக்கள் வெள்ளம் நிரம்பி வழிந்தது. 'க்ரீச்' என்ற சத்தத்துடன் ரயில் நுழைந்தது தான் தாமதம் கூட்டிற்கு திரும்பிய தாய் பறவையின் வாயை நோக்கி போட்டிபோடும் குஞ்சுகளை போல அனைவரும் ரயிலின் நுழைவாயிலை நோக்கி முண்டியடித்து கொண்டு ஏறினர். உட்கார இடம் கிடைத்த பெருமிதத்துடன் சிலர் பெருமூச்சு விட வடைபோச்சே என்ற ஏக்கத்துடன் வேடிக்கை பார்த்தனர் மற்றவர்கள்.
thanks for photo flicker

             அவர் அவர் வசதிக்கேற்ப அன்றைய செய்தித்தாள், வார பத்திரிகை, கைபேசி என நேரத்தை விழுங்க முற்பட்டிருந்தனர். இதன் மத்தியில் இவர்களின் கவன சிதறலை சில்லரையாக மாற்ற கரகரத்த குரலுடன் எம்.ஜி. ஆர் பாடல்கள், கண்ணு தெரியாதவன்மா காலில்லமா என தனது இல்லாமையையும் இயலாமையையும் விற்றுகொண்டிருந்தனர். இரண்டு மூன்று நிறுத்தம் கடந்த ரயில் வண்டி அந்த நிறுத்தத்தில் நின்றது. மக்கள் இறங்குவதும் ஏறுவதுமாக இருந்தனர், ரயில் நகரத்துவங்கியவுடன் அந்த மூன்று பேர் அவசரமாக ஏறினர்.
'ஏ பார்த்துடி..' என்று ஒருத்தி மற்றவளை பார்த்து கூறினால்.
அவர்களின் சிரிப்பு சத்தம் அந்த பெட்டி முழுவதும் கேட்டது.ரயிலில் பயணம் செய்தவர் அனைவரும் ஒரு நிமிடம் அவர்களை திரும்பி பார்த்தனர். மெல்லிய தேகம் பளிரென்ற உதடுச்சாயம் கைநிறைய வளையல் இவையாவும் யாரையும் வசிகரித்ததாக தெரியவில்லை.
ரயிலில் பயணம் செய்தவர்களிடம் மூவரும் கைகளை தட்டி
"ராஜா அக்காக்கு காசு கொடுப்பா".
"அண்ணா காசுகொடுனே".
"அக்கா ஹெல்ப் பண்ணுங்கா"    
என அனைவரிடமும் காசு கேட்டனர்.சிலர் 5ரூ-10ரூ என கொடுத்தனர், சிலர் அவர்களைப்பற்றி காது படவே கொச்சையாய் கிண்டல் செய்தனர்.எது பற்றியும் கவலை படாமல் அனைவரிடமும் சிரித்துகொண்டே பணம் கேட்டனர்.அவர்களில் ஒருத்தி கதவோரம் நின்று வேடிக்கை பார்த்து கொண்டிருந்தவனிடம் 

"அண்ணா காசு கொடுணா"என்றால்,

              தன் பர்சை எடுத்தவன் ஒரு முழு 100ரூ நோட்டை அவளிடம் நீட்டினான், நூறு ருபாய் நோட்டை பார்த்தவுடன் மிக சந்தோஷத்தில் அவன் கன்னம் கில்லி அவன் தலை கைவைத்து கடவுளின் பெயர்களை சொல்லி ஒருகுறையும் வராது என வாழ்த்தினால்.அருகில் இருந்தவளிடம் நூறு ருபாய் நோட்டை காட்டி அவனை காட்டி தம்பி கொடுத்தது என்றால் அடுத்த நிறுத்தம் வரவே அடுத்த பேட்டியில் ஏற மூவரும் முற்பட்டனர் இறங்கும் போது அவன் கனத்தை கிள்ளிவிட்டு சிரித்து கொண்டே இறங்கினர் அவனும் பதிலுக்கு சிரித்து விட்டு வேடிக்கை பார்க்க ஆரம்பித்தான்.அனைவரும் அவனையே பார்த்து கொண்டிருந்தனர், சிலர் அருகில் உள்ளவரிடம் எதோ கிசுகிசுத்தனர்.அவன் அருகில் இருந்த நடுவயது ஒருத்தர் அந்த '.......'களுக்கு எதுக்கு தம்பி 100 ரூ கொடுத்திங்க '.........'கழுதைங்க கொடுக்கறதை வாங்கிட்டு போவாதுங்க 10த கொடு 20த கொடுனுவாளுங்க உங்களைமாதிரி சிலர் கொடுக்குறதாலதான் '......'லுங்க கொழுபெடுத்து அலைராளுங்க என்று அவனிடம் அ''றிவுரை கூறினார் பதிலுக்கு ஒரு புன்னகை மட்டும் சிந்திவிட்டு அடுத்த நிறுத்தத்தில் இறங்கி தன் மணிபர்சை எடுத்து தானும் வீட்டை விட்டு ஓடிப்போன தன் தம்பியும் சிறுவயதில் எடுத்து கொண்ட புகைபடத்தை ஒருமுறை பார்த்துவிட்டு உள்ளே வைத்துகொண்டு நடக்க ஆரம்பித்தான்.

டிஸ்கி:
திருநங்கைகளை பற்றிய கதை என்பதால் தலைப்பிலேயே உங்களை அவர்களை பற்றிய ஒரு அசெளகரியத்துடன் அல்லது ஒரு பிம்பத்துடன் கதையை அணுக கூடாதென்பதற்காகவே இந்த தலைப்பு.
                                                                                                    -அபி
தங்கள் கருத்துகள் அன்புடன் வரவேற்கபடுகின்றன.

Monday, November 12, 2012

ரெடிமேட் தீபாவளி


          வலையுலக நண்பர்களுக்கு என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள். எந்த வயதையுடையவராயினும் தீபாவளி என்றதும் நமக்கு முதலில் ஞாபகம் வருவது இனிப்புகளும் பட்டாசும் புத்தாடையும் தான். நான் பள்ளியில் படிக்கும் போது தீபாவளி என்பது நவம்பர் மாதம் பிறந்தவுடனேயே ஆரம்பித்துவிடும் அப்போது துணி எடுத்து கொடுத்தால்தான் தீபாவளி முந்தினநாலாவது கிடைக்கும் வீட்டில் செலவு குறித்து கையை பிசைந்து கொண்டிருக்கும் பொது பட்டாசு குறித்த கனவுகள் சரவெடியாய் வெடிக்கும் எதிர் வீடு சரவணனை விட ,பள்ளிகூடத்தில் பக்கத்தில் உட்காரும் ரவியைவிட 1௦௦ரூபாய்யாவது அதிகம் வாங்கிவிட வேண்டும் என்று மனம் துடிக்கும். போன தீபாவளிக்கு சரவணன் வெடித்த 1௦௦௦௦ வாலா ,பாபு கொளுத்திய ட்ரிபுள் சாட் என பெரிய லிஸ்ட்டே தயார் செய்து வைத்திருப்போம். கடைசியில் கிடைப்பது என்னவோ ரெண்டு பாக்கெட் மிளகாய் வெடி அல்லது நாட்டு வெடி,  சில கம்பிமத்தாப்பூ, புஸ்வானம்,சாட்டை,பாம்பு மாத்திரை பாக்கெட்டுகள் மட்டுமே. மிளகாய் வெடியில் பாதி வெடிக்காது அதையெல்லாம் பிரித்து வெடி மருந்தை மட்டும் ஒன்றாய் கொட்டி அப்துல் கலாமின் கிரயோஜெனிக் என்ஜின் தயாரிப்பதுபோல் ஆராய்ந்து கொண்டிருப்போம். தீபாவளி அன்று தான் பெரும்பாலும் என்னை தேய்த்து குளிப்போம் எங்கள் தலையில் என்னை தேய்க்க எங்கள் அம்மா படும் பாடு சொல்லி மாளாது.அவசர அவசரமாக குளித்து விட்டு வெடி போட சிட்டாய் பறந்து விடுவோம்.துப்பாக்கி ரோல் கேப் வீட்டினுள் காது பிளக்க தாத்தா  பாட்டியின் கோபத்திற்கு ஆளாவோம். கோபம் எல்லாம் கொஞ்ச நேரம் தான்.

புது சட்டை போட்டுக்கொள்வது என்பது ஒரு அலாதியான விஷயம்.அதுவும் ஒரு வீட்டில் இரண்டு மூன்று குழந்தைகள் இருந்தால் போதும் துணிக்கடையில் தீபாவளிக்கு சட்டை எடுக்கும் போது ஒரு போர்களமே நடக்கும். அவனுக்கும் மட்டும் நல்ல சட்ட வாங்கி குடித்திடிங்க என்னீது நல்லாவே இல்ல என்று அண்ணன் தம்பிக்குள் பனி போர் நடக்கும்.பட்டாசு தீர்ந்ததும் பணியாரம் இனிப்பு வேட்டை ஆரம்பமாகும்.பத்து நிமிடத்திற்கு ஒரு முறை சமையல் அறை நுழைந்து கை நிறைய அள்ளி கொண்டு அம்மாவின் கையில் சிக்காமல் ஓட்டம் பிடிப்போம்.இன்றும் இந்த குழந்தைகளின் உலகம் பெரும் மாற்றத்தினை அடைந்துவிடவில்லை ஆனால் வீட்டின் பெரியவர்களின் நிலை இன்று அடியோடு வேறு.பண்டிகையின் சாராம்சம் மறந்து இன்று எல்லாம் நாலு சுவருக்குள்ளும் தொலைகாட்சி முன்னும் முடிந்து விடுகிறது இன்று யாரும் ஊரில் உள்ள உறவுகளுக்கு பொங்கல் வாழ்த்து அட்டையோ தீபாவளி வாழ்த்தோ அனுப்புவதில்லை. கடிதம் எழுதுவது வாழ்த்து அட்டை அனுப்புவது வழகொழிந்து விட்டது தான்.எல்லாரிடமும் கைபேசி இருகின்றது 5ரூபாயில் இன்று ஊரையே போனில் விசாரித்து விடலாம் ஆனால் நேரம் வாய்க்காமல் ஓடிகொண்டிருக்கிறோம்.


பண்டிகைகள் ஊரில் உள்ள மக்கள் அனைவரும் வேற்றுமைகளை களைந்து ஒன்று கூடி மகிழ்ந்து, உண்டு, உறவாடுவதற்காக என்பதற்காக தோற்றுவித்தோம் ஆனால் காலபோக்கில் அது உறவுகளுக்குள் சுருங்கி இன்று வீடுகளுக்குள் முடங்கி விட்டது எத்தனை பேர் இன்று நாம் வீட்டின் அருகில் உள்ளவர்களுடன் வாழ்த்துகளை பரிமாறிகொள்கின்றோம் எல்லாம் ஒரு புன்முறுவலில் முடிந்துவிடுகிறது.

இன்றும் கிராமப்புறத்து மக்களும் தென் தமிழகத்து மக்கள் தான் இன்று கோயம்பேடில் குவிகின்றனர்

இன்று  எல்லாமே ரெடிமேட் கலாச்சாரமாகிவிட்டது இட்லி மாவில் இருந்து வீடு வரை எல்லாம் ரெடிமேட் ஆக கிடைகின்றது பண்டிகையும் அப்படி ஆகிவிட்டது.             
தீபாவளிக்கு வீட்டில் உள்ள பெண்கள் அனைவரும் ஒன்று கூடி ஊர்கதை பேசி மகிழ்ந்து தீபாவளிக்கு  இனிப்புகள், பணியாரம் செய்யம் காலம் எல்லாம் இப்பொது இல்லை ஸ்வீட் ஸ்டால் சென்று ஒரு கிலோ இனிப்பு, கிரைண்டரில் மாவு அரைத்து வடை சுட்டு டிவி முன் அமர்ந்து விடுகின்றனர்.தேடி தேடி பட்டாசு வாங்குவது கூட இப்பொது கிப்ட் பாக்ஸ்சோடு முடிந்து விட்டது.
இன்று பண்டிகையின் நிறம் மாறி இருகின்றது கொண்டாட்டத்தின் வகை மாறி இருகின்றது.
சோ சொல்ல வரது என்னன்னா எல்லாருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.          
                                                                      

Monday, November 5, 2012

சர்ச்சையைக் கிளப்பியுள்ள ஒரு பெண் புலியின் வாக்குமூலம்!


                                            
  
                           வித்யாராணி என்ற பெண்விடுதலைப் புலி ஒருவர் அளித்ததாக விகடன் வார இதழில் வெளியான நேர்காணல் குறித்து பலத்த சர்ச்சை எழுந்துள்ளது.
அந்தப் பேட்டியில் பிரபாகரன் இறந்துவிட்டதாகவும், ஈழப் போராட்டம் வேரோடும் வேரடி மண்ணோடும் பிடுங்கி எறியப்பட்டுவிட்டதாகவும் வித்யாராணி கூறியுள்ளதை, திட்டமிட்ட இன விரோத செயல் என பல்வேறு ஈழ அமைப்புகளும் விமர்சித்துள்ளன.
தமிழ் மக்களின் ஈழ விடுதலைப் போராட்டத்தை குலைக்கும் உளவியல் போர் இது என்று வர்ணித்துள்ளனர்.
ஆனந்த விகடனில் வெளிவந்துள்ள அந்தக் கட்டுரை:
வித்யா ராணி... 2009 மே வரை தமிழ் ஈழம் போற்றிய ஒரு பெண் போராளி. ஆனையிறவு முகாம் மீதான தாக்குதல் தொடங்கி 'ஜெயசிக்குறு எதிர் சமர்' என ஈழத்தின் பெரும் சமர்களிலும் பங்கெடுத்தவர்.
ஈழத்தின் இறுதி யுத்தம் முள்ளிவாய்க்கால் வரை களமாடிய போராளி. ஈழத்துப் பெண் புலிகளின் வீரத்தை உலகுக்குச் சொன்ன 'சோதியா படையணி'யின் முன்னணித் தளபதிகளில் ஒருவர்.
ஜான்சி ராணி, வேலு நாச்சியார் போன்ற வீராங்கனைகளுக்கு இணையாகத் தமிழ் ஈழத்தில் ஒரு காலம் புகழப்பட்ட வித்யா ராணி... கால வெள்ளச் சுழலில் இன்று ஒரு பாலியல் தொழிலாளி.
உங்களிடம் கருணை தேடியோ, பரிதாபம் ஈனவோ வித்யா ராணி இங்கு பேசவில்லை... 'இதுதானடா தமிழா... இலங்கையில் இப்போதைய நிலைமை!' என்று சில உண்மைகளை முகத்தில் அறையவே இந்தப் பேட்டிக்குச் சம்மதித்தார்.
எனது சொந்த ஊர் யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை. 1995 ஜூலை மாதம் நாம் இடம்பெயர்ந்து நவாலியில் உள்ள தேவாலயத்தில் தஞ்சம் புகுந்து இருந்தோம். நவாலியை அண்மித்த பிரதேசங்களில் இருந்து சுமார் 500 பேரளவில் அங்கு தஞ்சம் புகுந்திருந்தோம்.
ஜூலை மாதம் ஒன்பதாம் திகதி 'புக்காரா' விமானங்கள் வானத்தில் இருந்து நடத்திய தாக்குதலில் எனது கண்ணுக்கு முன்பாக சுமார் 125 அப்பாவித் தமிழ் மக்கள், 'அவர்கள் தமிழர்கள்' எனும் ஒரே காரணத்துக்காகக் கொல்லப்பட்டனர்.
என்னுடன் அந்தக் கணம் வரை சிரித்து விளையாடித் திரிந்த எனது இரண்டு வயதுத் தம்பி எனது கண்களுக்கு முன்பாக உடல் இரு துண்டாகி இறந்துபோனான். தம்பி உடல் சிதைந்து இறந்த கணம் எனக்கு நினைவு தப்பியது.
சுமார் ஒரு வாரம் மயக்கமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இருந்தேன். கண் விழித்துப் பார்த்தபோது, தம்பியோடு தாயையும் அந்தத் தாக்குதலில் பறிகொடுத்ததை அறிந்துகொண்டேன்.
நான் உயிரினும் மேலாக நேசித்த எனது தம்பியைக் காப்பாற்ற முடியவில்லை என்கிற வலி எனக்குள் ஆற்றுப்படுத்த முடியாத கோபத்தைக் கிளப்பியது. சிறு குழந்தை அவன். எனது உதவி இல்லாமல் காலைக் கடன்கூடக் கழிக்க முடியாத குழந்தை. அவன் என்ன பாவம் செய்தான்? அவன் உடல் சிதறிக் கொல்லப்பட என்ன காரணம்?
தமிழனாகப் பிறந்த ஒரே காரணத்துக்காக எவ்வளவு காலம்தான் எமது குழந்தைகளை நாம் பலிகொடுப்பது? எமது அடுத்த சந்ததியைக் காக்க வேண்டிய கடமை எனக்கு இருப்பதாக எனது உள் மனம் சொன்னது. நான் விடுதலைப் புலிகளுடன் போராட்டத்தில் இணைந்தேன்.
பெண்களை முதல்முறையாக மரபு வழியாகப் போராடவைத்த எல்.டி.டி.ஈ. இயக்கத்தில் பெண்கள் படையணி எந்த அளவுக்கு வலிமையாக இருந்தது?
1985 ஆவணி மாதம் 18-ம் திகதி பெண் புலிகளுக்கான உத்தியோகப்பூர்வமான பயிற்சிப் பாசறை ஆரம்பிக்கப்பட்டது. அன்றில் இருந்து ஈழப் போரின் இறுதிக் கணம் வரை விடுதலைப் புலிகளின் மிகப் பெரிய தூண்கள் பெண்கள் படையணி.
பெண்களைப் போராட்டத்தில் இணைத்ததன் மூலம் பிரபாகரன் செய்தது மிகப் பெரிய சமூகப் புரட்சி. சாதிக் கொடுமைகளும் பெண்களுக்கு எதிரான அடக்குமுறைகளும் தாண்டவமாடிய ஈழத்தில் பெண்களைப் போராட்டத்தில் இணைத்ததன் மூலம் பெண்களின் மேல் கலாசாரம் எனும் பெயரால் விதைக்கப்பட்ட அடக்குமுறைகளை எல்லாம் பிரபாகரன் நீக்கினார்.
ஆண்கள் படையணிகள் மேல் வைத்திருந்த அதே நம்பிக்கை அவருக்கு பெண்கள் படையணிகள் மீதும் இருந்தது. பிரபாகரன் ஈழ விடுதலைக்காக மாத்திரம் போராடவில்லை. அவர் பெண் விடுதலைக்காகவும் போராடியவர்.
ஈழ விடுதலையை அவரால் அடைய முடியவில்லை. ஆனால், பெண் விடுதலை ஈழத்தில் எப்போதோ பெறப்பட்டுவிட்டது!
அவரது படையணியில் இருந்தவர் என்ற முறையில், பிரபாகரன் என்றவுடன் உங்கள் நினைவுக்கு வருவது எது?
இந்த நூற்றாண்டு கண்ட மாபெரும் வீரன் அவர். ஒரே ஒரு துப்பாக்கியுடன் ஆரம்பித்த விடுதலைப் புலிகள் இயக்கத்தை யுத்த விமானம் வரை முன்னெடுத்து வந்தவர். அவர் இறந்தவுடன் ஈழப் போர் முடிவுக்கு வந்துவிட்டது. ஈழத் தமிழர்கள் இப்போது தலைவன் இல்லாத குடும்பம்போல உணர்கிறோம்!
இப்போது நீங்கள் பாலியல் தொழிலாளியா?
ஆம். இப்போது நான் ஒரு பாலியல் தொழிலாளி. ஆனால், பாலியல் தொழிலாளி ஆக்கப்பட்டவள்!
என்ன நடந்தது?
விடுதலைப் புலிகள் இயக்கத்தில் நான் இருந்தபோது சக போராளி கீரனைக் காதலித்து மணந்தேன். நான்கு வருடக் காதல் அது. நாங்கள் வாழ்ந்த வாழ்வுக்குச் சாட்சியாக இரு குழந்தைகள். இறுதிப் போரின்போது ஆனந்தபுரத்தில் இரசாயனக் குண்டடித்து இறந்துபோன 700 போராளிகளில் அவரும் ஒருவர்.
அவர் இறந்தவுடன் எனக்கு இருந்த ஒரு துணையும் இல்லாமல் போனது. அவர் இறந்துபோகும் கணம் வரை எனது குழந்தைகளின் எதிர்காலம்பற்றி நான் கவலைப்படவில்லை. ஆனாலும், நான் மனம் தளராமல் போராடினேன்.
எமது போராட்டத்தில் தோற்றுப் போவோம் என நாங்கள் கனவிலும் நினைத்தது இல்லை. ஆனாலும், நாங்கள் தோற்று விட்டோம். எமது போராட்டம் தோற்றுப் போனால் என்ன செய்வது என்கிற எந்தவிதமான முன் ஏற்பாடும் எங்களிடம் இல்லை.
முள்ளிவாய்க்காலில் இருந்து நானும் எனது ஆயுதங்களைக் கைவிட்டு இராணுவப் பிரதேசங்களுக்கு எனது இரு குழந்தைகளுடன் வந்தேன். வவுனியா மெனிக்பாம் முகாமில் தங்கியிருந்தபோது, இராணுவப் புலனாய்வுப் பிரிவால் கைது செய்யப்பட்டேன்.
எனது குழந்தைகள் என்னிடம் இருந்து பிரிக்கப்பட்டனர். வவுனியாவில் இருந்து விசாரணைக்காக அனுராதபுரம் முகாமுக்குக் கொண்டுசெல்லப்பட்டேன்.
அங்கு கொண்டுசெல்லப்பட்ட முதல் நாளே விசாரணை எனும் பெயரில் இராணுவத்தினரால் கூட்டாகக் கற்பழிக்கப்பட்டேன்.
காலை, மாலை, இரவு என ஒரு நாளைக்குக் குறைந்தது மூன்று முறையாவது கற்பழிக்கப்பட்டேன்.
எனது கண்களுக்கு முன்னால் சுமார் 50-க்கும் மேற்பட்ட பெண் போராளிகள் இராணுவத்தினரால் கற்பழிக்கப்பட்டனர்.
பெரும்பாலான பெண் போராளிகள் தற்கொலை செய்துகொண்டனர். எனது குழந்தைகளின் எதிர்காலத்தை நினைத்து நான் உயிருடன் இருந்தேன்.
அழகான பெண் போராளிகள் உயர் அதிகாரிகளால் கற்பழிக்கப்பட்டனர்.
சில போராளிகள் சிங்கள இனவாத அமைச்சர்களாலும் கற்பழிக்கப்பட்டனர்.
சோதியா படையணியில் குறிப்பிடத்தக்க தளபதியாக இருந்தவள் என்ற ஒரே காரணத்துக்காக இராணுவ உயர் அதிகாரி ஒருவரும் சிங்களப் பேரினவாதத்தைத் தனது ஒவ்வொரு வார்த்தையிலும் விஷமாக உமிழும் ஒரு அமைச்சரும் என்னைக் கூட்டாகக் கற்பழித்தனர்.
காமப் பசியாற்றுவதற்காக அவர்கள் கற்பழிக்கவில்லை. 'தமிழ்ப் பெண்களைக் கற்பழிக்கிறோம்' என்ற மிருக வெறி உந்தித் தள்ளலே அவர்களை முடுக்கியது. எங்கள் வேதனைகளைக் கை கொட்டி ரசிக்கும் மிருகத்தனம் இருந்தது.
கூட்டாகக் கற்பழிக்கப்படும்போதே இரத்தப்போக்கு அதிகமாகி இறந்தார் என் தோழி ஒருவர்.
குதறிக் கிழிக்கப்பட்ட பெண்களின் பிறப்புறுப்பில் பெற்ரோல் ஊற்றி அவர்கள் வலியால் துடிப்பதைக் கைகொட்டி ரசித்தனர்.
அவர்களின் மார்பகத்தில் ஊசிகளை ஏற்றி, அவர்களின் மலத் துவாரங்களில் இரும்புக் குழாய்களைச் செலுத்தி, அவர்கள் வலியால் துடிப்பதை வெற்றித் திருவிழாவாக ரசித்தனர்.
பெண் போராளிகளை எவ்வளவு தூரம் சிதைக்க முடியுமோ அவ்வளவு தூரம் மிருகத்தனமாகச் சிதைத்தனர்.
எனது குழந்தைகளுக்காக நான் எனது உயிரைக் கையில் பிடித்த வண்ணம் இருந்தேன்!
விசாரணை சித்திரவதையில் இருந்து எப்படித் தப்பினீர்கள்?
சிறிது காலத்தில் அவர்களாகவே விடுவித்தனர். எங்களை மீள் குடியேற்றம் செய்வதாகக் கூறி, முல்லைத்தீவுக் காடுகளுக்குள் கொண்டு போய் விட்டனர்.
அடுத்த வேளை உணவுக்கே திண்டாடும் நிலை. வன விலங்குகள், பாம்பு, பூச்சிகளுக்கு இடையே என் இரண்டு குழந்தைகளை வைத்துக்கொண்டு நான் பட்ட அவலத்தை வார்த்தையில் வடிக்க முடியாது.
பின், ஒருவழியாக அங்கிருந்து தப்பி யாழ்ப்பாணம் வந்தேன். யாழ்ப்பாணம் வந்த கணத்தில் இருந்துதான் நான் ஒரு பாலியல் தொழிலாளி ஆனேன்!
நீங்கள் பாலியல் தொழிலாளியாக மாறக் காரணம்..?
பசிதான் காரணம் சகோதரா. யாழ்ப்பாணம் வந்த எங்களுக்கு உதவ யாருமே இல்லை. தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறும் கட்சிகள் எல்லாமே வெறுமனே பெயர் அளவில்தான் இயங்குகின்றன.
முன்னாள் போராளி எனத் தெரிந்ததும் யாரும் உதவக்கூட முன்வரவில்லை. எங்களை ஏதோ தீண்டத்தகாதவர்கள்போல நடத்தினார்கள். எங்களிடம் பேசினால்கூட அவர்களுக்கு ஏதும் பாதிப்பு வரலாம் என அஞ்சினர்.
நானும் எனது இரண்டு குழந்தைகளும் தனித்து விடப்பட்டோம். பசியால் பிஞ்சுக் குழந்தைகள் வாடுவதை எவ்வளவு காலம்தான் சகித்துக்கொண்டு இருப்பது.
பால் சுரக்காத முலையைச் சப்பியவாறு 'பால்... பால்' என எனது சிறு குழந்தை அழுவதை நான் எப்படித் தம்பி சகித்துக்கொண்டு இருப்பது. எனக்கு வேறு எந்த வழியும் தெரியவில்லை!
ஏன், நீங்கள் வேலை தேடவில்லையா?
எங்களுடன் பேசவே பயந்தவர்கள் வேலை தருவார்களா என்ன? நான் வேலை தேடிச் சென்ற அனைத்து இடங்களிலும் என்னை உள்ளே விடவே பயந்தனர்.
பசி தாங்காமல் பிச்சை எடுத்தேன். எங்களுக்குப் பிச்சை போடக்கூடப் பயந்தனர். மீண்டும் சொல்கிறேன்... எனக்கு வேறு வழி ஏதுமே இல்லை.
யாழ்ப்பாணம் பழைய புகையிரத நிலையத்தில் பசி வயிற்றைச் சுருக்கப் படுத்திருந்தபோது, அங்கு வந்த ஒருவரிடம் பிச்சை கேட்டேன். அவர் என்னைப் படுக்க அழைத்தார். சென்றேன்.
அவர் வேலை முடிந்ததும் எனக்கும் எனது குழந்தைகளுக்கும் உணவு வாங்கித் தந்தார்.
அன்றில் இருந்துதான் நான் ஒரு பாலியல் தொழிலாளி ஆனேன். தம்பிக்காகப் போராளி ஆன நான், எனது குழந்தைகளுக்காகப் பாலியல் தொழிலாளி ஆனேன்!
யாரெல்லாம் உங்களின் வாடிக்கையாளர்கள்?
பெரும்பாலும் வயதானவர்கள். சில சிங்கள யாத்திரீகர்களும் வந்து போவார்கள். சில பாடசாலை மாணவர்களும் வருவார்கள். ஆனால், நான் அவர்களை அனுமதிப்பது இல்லை.
தமிழ் அரசியல் கட்சிகள் எதுவுமே உங்களுக்கு உதவ முன்வரவில்லையா?
அவர்கள் வெறும் பேச்சுக்குத்தான் அரசியல் கட்சிகள். அவர்கள் சிங்களப் பேரினவாத அரசாங்கத்தின் ஏஜென்ட் போலவே செயல்படுகின்றனர்.
இந்தியாவில் இருந்துகொண்டு தமிழ் ஈழத்துக்காகப் போராடும் எந்தத் தலைவர்களும் உங்களைப்போன்ற பெண்களுக்கு உதவிக்கரம் நீட்ட முன்வரவில்லையா?
(அதுவரை எந்த உணர்ச்சியும் இல்லாமல் தன்மையாக ஒலித்த குரலில் அனல் ஏறுகிறது)
இந்தியாவில் இருந்துகொண்டு ஈழத்துக்காகப் போராடுவதாகச் சொல்லும் எந்தத் தலைவர்களிடமும் ஈழம் சம்பந்தமான நேர்மையான புரிந்துணர்வே இல்லை.
'ஈழத் தமிழர்களாகிய நாங்கள் தோற்றுவிட்டோம்' என்கிற நிர்வாண கசப்பான உண்மையைக்கூட இன்னும் ஏற்றுக் கொள்ள முடியாதவர்களாக இருக்கிறார்கள்.
அதனால்தான் இன்றும் 'இனி ஒரு ஈழப் போர் வெடிக்கும். பிரபாகரன் திரும்பி வருவார்' என்றெல்லாம் சும்மா எழுதிக் கொளுத்திப் போடுகின்றனர்.
எமது போராட்டம் ஈழத்தில் இருந்து சர்வதேசத்தின் சதியால் வேரோடும் வேரடி மண்ணோடும் பிடுங்கப்பட்டு விட்டது.
எனது குழந்தைகளுக்கு அடுத்த வேளை உணவு இல்லாமல் பாலியல் தொழில் செய்துவரும் என்னிடம் வந்து, 'எப்போது உங்கள் அடுத்த போராட்டம்?' என்று கேட்டால், விளக்குமாறால் அடிப்பேன்.
(சட்டென ஆற்றாமை பொங்க, குரல் உடைந்து அழுகிறார்.)
இந்தியத் தலைவர்களே... உங்களைக் கை கூப்பித் தொழுகிறேன்... எங்களை வைத்து வியாபாரம் செய்வதை இனியாவது நிறுத்துங்கள்.
எமது அடுத்த சந்ததி வாழ வேண்டும். ஒரு நாளேனும் நிம்மதியான உறக்கம்கொள்ள வேண்டும். உங்களுடைய பிள்ளைகள் மட்டும் படித்தால் போதுமா? எமது அடுத்த சந்ததியும் கல்வி கற்க வேண்டும்.
ஈழத்தில் இன்னொரு போர் வேண்டும் என்று கூறும் நண்பர்களே... உங்களுக்குப் போர் எவ்வளவு வலியானது என்று தெரியுமா? போர் எவ்வளவு கொடுமையானது என்று தெரியுமா?
கண் எதிரே ஷெல் பட்டு இறந்துபோன பெற்றோரின் உடல்களைக் கூடத் தகனம் செய்ய முடியாமல் உயிருக்கு அஞ்சி ஓடிய எம்மவர்களின் வாழ்க்கையைப் பற்றி உங்களுக்கு ஏதாவது தெரியுமா?
தாய் இறந்ததைக்கூட அறியாது தாயிடம் முலைப்பால் குடித்த குழந்தையின் அவலத்தை நீங்கள் கண்டதுண்டா?
கர்ப்பிணித் தாயின் வயிறு வெடித்து, தாயும் நிறைமாத சிசுவும் அருகிலேயே கணவரும் துடிதுடித்த அவலத்தை நீங்கள் கண்டது உண்டா?
கண்டிருந்தால், நீங்கள் ஈழத்தில் மட்டுமல்ல, உலகின் எந்த மூலையில் போர் நடந்தாலும் ஆதரிக்க மாட்டீர்கள்!
உங்களால் இந்தப் பேட்டியில் விமர்சிக்கப்படும் நபர்கள் பதிலுக்கு உங்களை 'விபசாரி' என விமர்சித்...'
(கேள்வியை முடிக்கும் முன்பே சுளீரெனச் சொல்கிறார்...) 'நான் எனது உடலைத்தான் விற்கிறேன். அவர்களைப் போல ஆன்மாவை அல்ல!
(பின்குறிப்பு : பேட்டி அளித்தவரின் நலன் கருதி, அவரது பெயர் மாற்றப்பட்டுள்ளது.)
படம், பேட்டி: விகடன்

நன்றி :thatstamil,vikadan

Friday, October 19, 2012

அத்தோ- வடசென்னையின் அடையாளம்.



வட சென்னையின் பிராந்திய உணவான அத்தோவை பற்றிய பதிவிது. அத்தோ வடசென்னையில் மட்டும்மே கிடைக்க பெறும் மாலை நேர சிற்றுண்டி. இது வடசென்னையின் அடையாள உணவு. அத்தோ பர்மீசியத்தை(பர்மா) பூர்விகமாக கொண்ட நூடுல்ஸ் உணவு. இதன் செய்முறை மிக எளிது கோதுமை அல்லது அரிசி நூடுல்ஸ்சுடன் பொடியாய் நறுக்கிய முட்டைகோஸ், வெங்காயம், போஜோ(ஓட்டவடை),எண்ணெய்,வருத்த பூண்டு, கடலைமாவு, புளிகரைச்சல் அகியைவையை ஒன்றாய் ஒரு பாத்திரத்தில் போட்டு ஒன்றாக கிளறி அப்படியே பரிமாறப்படும். இதனுடன் வாழைதண்டு சூப் பரிமாறுகிறார்கள். இதேமாதிரி அத்தோ ப்ரை என்பது நூடுல்ஸ், முட்டைகோஸ், வெங்காயம், ஆகியவையுடன் முட்டை சேர்த்து பெரிய தடிமனனான இரும்பு தோசை கல்லில் நன்கு வதங்கும் வரை வருகின்றனர்.(முட்டையுடன் மீன் அல்லது கறி சேர்வா சேர்த்தும் செய்கின்றனர் என கேள்வி பட்டேன்).பெரும்பாலும் ரோட்டோர கடைகளில் அத்தோ விற்கபடுகின்றன சென்னை பீச் ஸ்டேஷன் எதிரே உள்ள போஸ்ட்டாபிஸ் பின்னால் வியாபாரம் வெலுத்து வாங்குகிறது வரிசையாக இரண்டு மூணு தள்ளுவண்டி கடைகளில் அனைத்து நிலை மக்களும் கால்கடுக்க நின்று சாப்பிடுகின்றனர் வீட்டிற்றிகும் பார்சல் பறக்கின்றது. ஒரு ப்ளேட் 35 ரூபாய், ½ ப்ளேட் 30 ரூபாய்.வாய்ப்பு கிடைத்தால் அனைவரும் தவறாமல் ருசிக்க வேண்டிய உணவு.