Sunday, January 8, 2012

தமிழரும் தமிழர் உணவும்:

எங்கே செல்கிறோம் நாம் நாகரிகம் என்ற பெயரில் நாம் நமது உண்மையான நாகரிகத்தையும் பண்பாட்டையும் மறந்து கொண்டிருக்கிறோம்.
நாம் முன்னோர்கள் பயிர்செய்து உண்ட தானியங்கலாகிய கம்பு, கேழ்வரகு, சாமை, திணை, சோளம், வரகு ஆகிய சிறு தானியங்களை அறவே மறந்து விட்டோம்.
பலர் இன்று அரிசி சோற்றிற்கு அடிமையாகிவிட்டோம்.கேழ்வரகு தெரியுமா என்றால் அது என்ன புது டெசெர்டா  என கேட்கின்றனர்.பிஸா ,பெர்கர் என சில 100 ரூ செலவு செய்யும் இவர்கள் 35 - 40 வயதில் மருத்துவமனைகளில் பல 100 செலவுசெய்கிரார்கள்.
வெளிநாடுகளில் குதிரைக்கு கொடுக்கும் ஓட்ஸ்சை கிலோ 120 - 150  ரூ கொடுத்து வாங்கும் இவர்களுக்கு இந்தியாவின் மற்றும் தமிழ்நாட்டின் கேழ்வரகு, கம்பு  20 ரூ கொடுத்து வாங்குவது கவுரவ  குரைசல்  (ஸ்டேடஸ் ப்ராப்லம்) ஆகிவிடுகிறது. இந்த வெளிநாடுகாரனின் வியாபார தந்திரத்துக்கும் விளம்பர மோகத்துக்கு அடிமையாகிவிட்டோம்.
இவர்கள் வள்ளுவன் கூறியது போல கனிஇருப்பக் காய்கவர்ந்தவர்கள். உணவே மருந்தாக உட்கொண்ட தமிழரின் மரபினை போற்றுவோம் பின்பற்றுவோம்.


No comments:

Post a Comment